×

ஊராட்சி மன்ற தலைவருக்கு கொலை மிரட்டல்

 

சிவகாசி, ஜூலை 18: சிவகாசி அருகே எம்.புதுப்பட்டியை சேர்ந்தவர் மகேஸ்வரி 30. இவர் கட்ட சின்னம்பட்டி ஊராட்சியில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் தனது வீட்டின் முன்பு ஊராட்சிக்கு சொந்தமான குப்பை வண்டியை நிறுத்தி இருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த கணேஷ் பாண்டி குப்பை வண்டியை அடித்து சேதப்படுத்தினார். இதுகுறித்து கேட்ட மகேஸ்வரியை தகாத வார்த்தை பேசினார். தொடர்ந்து அவர் ஊராட்சித் தலைவர் காளிராஜனிடம் புகார் தெரிவித்தார். காளிராஜன் சத்தம் போட்டதற்கு கணேஷ் பிரபு தகாத வார்த்தை பேசி அப்படித்தான் செய்வேன் என கூறி கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து திருத்தங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post ஊராட்சி மன்ற தலைவருக்கு கொலை மிரட்டல் appeared first on Dinakaran.

Tags : Panchayat Council ,Sivakasi ,Maheshwari ,M. Pudhupatti ,Katta Chinnampatti ,
× RELATED குடிதண்ணீர் கேட்டு காலி குடங்களுடன்...